உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதி விபத்து - 4பேர் பலியானார்கள். - 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ரோட்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது.
இதில் குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன்(1), ஜோதிகா(25), லட்சுமி (55), பாண்டிச்செல்வி(42) ஆகிய நான்கு பேர் பலியாகினர்.
மேலும் கவியாழினி (1), ஜெயபாண்டி (44), கருப்பாயி (55) ஆகிய 3 பேர். படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
-
எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
-
பத்திரிகையாளருக்கு எதிரான அவதுாறு வழக்கிற்கு தடை
-
பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தல்
-
பொன்னப்ப நாடார் பேரன் என்பதா? ராஜேஷ்குமாருக்கு எதிராக கொந்தளிப்பு
-
டில்லிக்கு போகாத ரங்கசாமி கூட்டணி கசப்பு காரணமா?
Advertisement
Advertisement