கூலி தொழிலாளி தற்கொலை
மயிலம் : மயிலம் அருகே கூலி தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தகுமார், 56; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை 11:00 மணிக்கு அதே கிராம புளியந்தோப்பு பகுதியில் மரத்தில் குமார் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மயிலம் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
Advertisement
Advertisement