வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு

காரியாபட்டி : செவல்பட்டி காலனியில் குடிநீர் குழாயில் திருகு இல்லாததால் வீணாகி தெருவில் தேங்கி வருவது, சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து செவல்பட்டி செல்லும் ரோடு படுமோசமாக இருப்பது, பெரியார் நகரில் வீதிகள் பள்ளமாக இருப்பதால் கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி துர்நாற்றம் வீசுவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் செவல்பட்டி காலனியில் வீதிகளில் போடப்பட்ட குடிநீர் குழாயில் திருகு உடைந்தது. மக்கள் தண்ணீர் பிடித்தது போக அடைக்க முடியாமல் மற்ற நேரங்களில் வீணாக வெளியேறி வருகிறது. வாறுகால் வசதி சரிவர இல்லாததால், தண்ணீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் தேங்குகிறது. சிறுவர்கள் அதில் விளையாடுவதால் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
கொசு உற்பத்தியால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் வர வாய்ப்பு உள்ளது. சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் ரோடு படு மோசமாக உள்ளது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இடறி விழுகின்றனர். மயானத்திற்கு செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்கின்றனர்.
பெரியார் நகரில் பெரும்பாலான வீதிகள் ரோடு மட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லை. வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி கிடையாது. அடிக்கடி தண்ணீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தெருவில் ஓடும் குடிநீர்
சுப்பையா, தனியார் ஊழியர்: காலனியில் சோனை கோயில் தெருக்களில் போடப்பட்ட குடிநீர் குழாயில் திருகு போடப்பட்டது. அதில் தண்ணீர் குறைந்த அளவு வந்ததால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. வேறு திருகு போட வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை இல்லாததால் திருகை கழட்டி வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். பிடித்தது போக அடைக்க முடியாமல் தற்போது வீணாகி வீதியில் தேங்குகிறது. வாறுகால் வசதி இல்லாததால் வெளியேற வழி இல்லை. சிறுவர்கள் அதில் விளையாடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுமோசமான ரோடு
திருமலை, தனியார் ஊழியர்: சக்தி மாரியம்மன்கோயிலில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் ரோடு படுமோசமாக இருக்கிறது. மாணவர்கள் செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி இருக்கிறது. பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுவதால் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளுக்குள் செல்லும் மழை நீர்
பழனிச்சாமி, தனியார் ஊழியர்: பெரியார் நகரில் பெரும்பாலான வீதிகள் ரோடு மட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் மழை நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்கிறது. முறையான வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் செல்ல வழி இல்லை. மழை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர், கழிவு நீர் எளிதில் வெளியேற வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை