எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 223வது வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.
இங்கு வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31 காலை 8:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது.
அன்று மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். மேலும் தினமும் பல்லக்கு, சிம்மம், சேஷ, கருட, அனுமந்த, யானை வாகனத்தில் வீதி உலா வருவார்.
ஜூன் 6 காலை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பூப் பல்லக்கில் வீதிவலம் நடக்கிறது.
ஜூன் 7 வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரம், மறுநாள் அதிகாலை குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பாரியாகம் நடக்கிறது.
ஜூன் 8 மாலை தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி மற்றும் கொடி இறகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு