டிப்பர் லாரிகள் பறிமுதல்
ஓசூர்: கிருஷ்ணகிரி தாலுகா துணை தாசில்தார் கணேசன் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், மலையாண்டஹள்ளி மன்னன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 2 யூனிட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் காவேரிப்பட்டணத்திற்கு ஏற்றி செல்வது தெரிந்-தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவேரிப்-பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அதிகாரிகள், குமுதேப்பள்-ளியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் நடத்-திய வாகன சோதனையில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொரப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஹட்கோ ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்