நகராட்சி பகுதியில் தரமற்ற சாலை புதிய சாலை அமைக்க கோரிக்கை

குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில்,
மத்திய அரசு திட்டமான, ஜல் சக்தி (அம்ருத்) 2.0 திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி முழுவதும் உள்ள பகுதியில் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு தற்போது குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நக-ராட்சி முழுவதும் இன்னும் முழுமையடையாத நிலையில் உள்-ளது.


குடிநீர் குழாய் அமைப்பதற்காக கடந்தாண்டு சாலை தோண்டப்-பட்டு குறிப்பிட்ட சாலைகளில் சிமென்ட் சாலைகளும், மற்ற இடங்களில் தார்ச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காவிரி நகர் முதல் குறுக்கு தெருவில், குடியிருப்பு பகுதியில் தரமற்ற முறையில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நக-ராட்சிக்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில் குளித்தலை நகராட்சி பகு-தியில் சாலை அமைக்க நிதி வழங்கப்பட்ட நிலையில், ஆறு மாதம் கூட முடிவடையாத நிலையில் புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலைகள் சேதமடைந்திருப்பது பொதுமக்களி-டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தரமற்ற சிமென்ட் சாலையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் நந்தகுமார் கூறியதாவது: தர-மற்ற முறையில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை அமைக்கப்பட்-டது தெரியவந்தால், சட்டப்படி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தரமற்ற சாலை மீண்டும் சரிசெய்யப்-படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement