நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்

நாமக்கல்: நாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில் கேழிப்பண்ணைகளின் தீவன தேவைக்-காக மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட பல்-வேறு மூலப்பொருட்களும், அதேபோல் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, நெல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வடமாநிலங்களில் இருந்தும், தஞ்சாவூர், நாகப்பட்-டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாங்கி வரப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசிக்காக, நாகப்பட்டி-னத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டு. அவை அரைப்பதற்காக, ப.வேலுார், கபிலர்மலை உள்ளிட்ட பகுதியில் செயல்படும் நெல் அரவை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

Advertisement