மோகனுார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கல்
மோகனுார்: மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவைப்பருவதில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, நிலுவை தொகை, 23.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கரும்புக்கான பணம் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
நீண்ட நாட்களாக கடும் சிரமத்துடன் இருந்து வந்த விவசாயிகள், ஆலை நிர்வாகத்-திடம் கரும்புக்கான பணத்தை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும், பல்வேறு அமைப்பினர், விவசாய சங்கத்தினரும், தமி-ழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர், தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்-தொகை, 23.47 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விரைந்து வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கரும்பு நிலுவை தொகை சம்பந்தப்-பட்ட வங்கிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. கரும்பு நிலுவை தொகையை வழங்க முயற்சி மேற்கொண்ட அமைச்சர்க-ளுக்கும் பணத்தை வழங்க விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு, விவசாயி
கள் சங்கங்கள் பாராட்டி உள்ளன.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்