மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ராசிபுரம்,: ராசிபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள களரம்பட்டியில், சி.எஸ்.புரம் சாலையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், கந்-தசாமி சுவாமிகளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல் கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 23 காலை கணபதி ஹோமம், நவகி-ரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது. மாலை, 3:00 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் ராசி-புரம் மாரியம்மன் கோவிலில் தொடங்கி, களரம்பட்டி மாரி-யம்மன், காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கண் திறப்பு, கோபுர கலசம் வைக்கும் பணி நடந்து முடிந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு மாரியம்மன், காளியம்மன் கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக-ளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்