ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு  

புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பிய மனு:

புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பேரூராட்சி பகுதியில் பயன்பாட்டில் இருந்த குளங்களை மீட்கவும் மனுக்கள் அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இனியாவது புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 9 குளங்கள்,2 குட்டைகள் மற்றும் புவனகிரி வெள்ளாறு வடக்கரை பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி மீட்டெடுத்து, சுத்தமான நீர் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement