கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

விருத்தாசலம் : ஆன்லைன் பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூழாங்கற்கள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சந்தேகத்தின் பேரில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 4 யூனிட் கூழாங்கற்கள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், லாரி டிரைவர் நடியப்பட்டு ஆறுமுகம், 45; என்பதும், ஆன்லைனில் ஏற்கனவே வாங்கிய பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூழாங்கற்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும், லாரி உரிமயைாளர் நடியப்பட்டு தர்மலிங்கம் மகன் வேல்முருகன், 30; மீது வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement