பதவிக்காலம் முடிந்தும் மாறாத பெயர் பலகை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில், ஊராட்சி பெயர் பலகையில் தலைவர் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
ஊராட்சிகளில் தலைவர் பதவி காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதன்பின், தனி அலுவலர்களால் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சியில் உள்ள கிராமப்புற எல்லையோர பகுதியில், பெயர் பலகையில், ஊராட்சி பெயர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
தனி அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தினை கவனித்து வருவதால், தற்போது அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள பெயர் பலகையில் அந்தந்த ஊராட்சி பெயருடன், தனி அலுவலர் என எழுதப்பட்டுள்ளது.
ஆனால், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சில ஊராட்சியில், எல்லையோர பெயர் பலகையில், முன்னாள் ஊராட்சி தலைவர் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. இதை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்