மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'
கோவை; கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு, கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,) வழங்கப்பட்டுள்ளது.
கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து டி.சி., வழங்கி வெளியேற்றக்கூடாது என்று, தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் இன்னும் ஒருவாரத்தில் திறக்கவுள்ள நிலையில், கோவையில் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி., வழங்கப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவர்களின் ஒப்புதலோடு டி.சி., வழங்கப்பட்டதாக சக மாணவியர் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, அந்த பள்ளியில் மாணவியை சேர்க்க, பெற்றோரிடம் சிபாரிசும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, பல பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தலைமையாசிரியர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.
இதற்கு முன்பு தனியார் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை, இப்போது அரசு உதவிபெறும் பள்ளிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது துர்திர்ஷ்டவசமானது. டி.சி., வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், 'யாரையும் கட்டாயப்படுத்தி டி.சி., வழங்கவில்லை. பெற்றோரின் கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்பட்டது'என தெரிவித்தார்.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்