தொழிலாளி மர்மச்சாவு

சேலம்:சேலம், தளவாய்பட்டி, பெத்தானுார் கலர்காட்டை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் சந்தோஷ்குமார், 19. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று வீடு அருகே மயங்கி கிடந்தார்.

உறவினர்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்-றனர். அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். இரும்-பாலை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சந்தோஷ்குமார், ஒருதலை காதலால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement