நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்; கனமழை தொடர்வதால் திடீர் அறிவிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்வதால் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் , 21.5 செ.மீ. , மழை பதிவானது.
அப்பர் பவானி, எமரால்டு, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 10 செ.மீ., மேல் மழை பதிவானது. மழைக்கு ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலூர் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.
தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டீ பார்க், மரவியல் பூங்காக்கள் நேற்று மதியம் திடீரென மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் கூடலுார் ஊசி மலை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். ஊட்டியில் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில்,''நீலகிரியில் மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடர் குழுவினர் மழை பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். 26 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சிலர், பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்றனர். அப்போது மரக்கிளை விழுந்ததில் ஆதிதேவ்,15, என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுவன் உடல் மீட்கப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் சாமிநாதன் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். சிறுவன் உடல் கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட்டது.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்