தமிழகத்தின் முதல் சுற்றுலா தொழில் பூங்கா: கன்னியாகுமரியில் அமைக்கிறது 'சிப்காட்'

சென்னை : 'சிப்காட்' நிறுவனம், சுற்றுலா துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா தொழில் பூங்கா ஒன்றை கன்னியாகுமரியில் அமைக்க உள்ளது. இதற்கான இடத்தை அடையாளம் காணும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
தமிழகத்தில் சுற்றுலா துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதுடன், 25 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் ஆலை அமைக்க ஏதுவாக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனம், கடந்த, 50 ஆண்டுகளாக தொழில்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதால், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் உள்ளது.
இதை பயன்படுத்தி, சுற்றுலா முதலீட்டை ஈர்க்க, சுற்றுலா தொழில் பூங்காவை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, முதல் சுற்றுலா தொழில் பூங்கா, கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுலா தொழில் பூங்காவில் கேளிக்கை விடுதி, நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன், மாநாட்டு கூடம், கணினியில் வேலை செய்வதற்கான சூழலை உள்ளடக்கிய கட்டமைப்பு வசதிகள் போன்றவை இடம்பெறும்.
தொழிற்சாலைகளை சுற்றி பார்க்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்காது.
எனவே, சுற்றுலா தொழில் பூங்காவில், கார் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளின் மாதிரிகளும் இடம்பெறும்.
இதேபோல், சுற்றுலா பயணியரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதுடன், தொழில் நிறுவனங்களின் வணிகத்திற்கும் உதவும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இவை தொடர்பாக, பல்வேறு ஆய்வு நடக்கின்றன.
முதலாவது சுற்றுலா தொழில் பூங்காவை, கன்னியாகுமரியில் அமைக்க, இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இடம் அடையாளம் காணப்பட்டதுடன், சுற்றுலா துறையுடன் இணைந்து, சுற்றுலா தொழில் பூங்கா உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சாலைகளை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்காக, மாதிரி தொழிற் சாலைகள் இந்த தொழில் பூங்காவில் இடம்பெறும்
*மாதிரி தொழிற்சாலைகள்
*கேளிக்கை விடுதிகள்
*நட்சத்திர ஹோட்டல் வசதி
*மாநாட்டு கூடம்
*பொழுதுபோக்கு அம்சங்கள்
*வணிக கட்டமைப்பு வசதிகள்
இலக்கு5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்ப்பது
25 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவது
மேலும்
-
பஸ் ஊழியர் ஊதிய பேச்சு நாளை நல்லபடியாக முடியுமா?
-
சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் குளறுபடி கூட்டமைப்பு தலைவர் போராட்ட எச்சரிக்கை
-
மூத்த நடிகர்கள் குறித்து விமர்சனம் கைதான காமெடி நடிகருக்கு தடை
-
'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'
-
'சாண்ட்விச்' மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
-
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா; கவர்னருக்கு மீண்டும் அனுப்பியது அரசு