'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'

பெங்களூரு : பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து தகராறு செய்து, அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோவை ம.ஜ.த., வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில் ம.ஜ.த., வெளியிட்டுள்ள வீடியோ:

பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் தொகுதியான இங்கு, சில நாட்களுக்கு முன், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். கல் வீச்சு நடத்தி உள்ளார்.

கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் கூடி வாழும் அமைதி பூங்காவான கர்நாடகாவில், ரவுடி கோத்வால் சீடர்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். பி.டி.எம்., லே - அவுட்டில், குட்டி ரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது.

ரவுடிகள், போக்கிரிகளுக்கு சட்டம் மற்றும் போலீசாரை பற்றிய பயம் இல்லை. பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகா முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

பொது மக்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. பயம், பதற்றத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement