ரூ.1.78 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

ராசிபுரம ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.


நேற்று, 358 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சம் கிலோ, 601 ரூபாய், குறைந்தபட்சம், 404 ரூபாய், சராசரி, 496 ரூபாய் என, 358 கிலோ பட்டுக்கூடு, 1 லட்சத்து, 78 ஆயிரத்து, 288 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement