விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன், மா. கம்யூ., கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய செயலர் குருமரகுரு தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர் சந்திரசேகரன், ஜீவானந்தம், வழக்கறிஞர் சங்கரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள் பெரியசாமி, செல்வக்குமார், நெல்சன், செந்தில், கவிதா, விமலா, வேல்முருகன், கோவிந்தராஜ், சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், விருத்தாசலம் ஆலடி சாலையில் மின் விளக்கு அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை துார்வார வேண்டும். பெரியார்நகர் ஏ.சி., பயணியர் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நகராட்சி கமிஷனர் பானுமதியிடம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை