குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்; ரோடு சேதம்

வேடசந்துார்: கரூர் வேடசந்துார் காவிரி குடிநீர் குழாய் ரோடு அடியில் அமைக்கப்பட்டதால் அடுத்தடுத்து உடைப்பு ஏற்படுகிறது. விபத்து அபாயம் ஏற்படுவதற்கு முன் குழாய் பாதையை மாற்றியமைக்க வேண்டும்.
கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளையில் இருந்து டி.கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார் வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய் பாதையில் பாளையம், குஜிலியம்பாறை, புளியம்பட்டி, கோவிலுார் என 15 கி.மீ., துாரத்திற்கு திண்டுக்கல் கரூர் மெயின் ரோடு அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாய் பதித்த பகுதியின் மேல் ரோடை அமைத்து விட்டனர். ரோடு அமைத்த பின் அடுத்தடுத்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. ரோடு பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கிய நிலையில் குழாயில் உடைப்பு ஏற்படுவதும், அடைப்பதுமாக உள்ளனர். குஜிலியம்பாறை பாளையம் இடைப்பகுதியில் காவிரி குழாயில் பெரும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது . அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் காவிரி குடிநீர் குழாயை சாலையோரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சரி செய்வதற்கு ஒரு வாரமாகிறது
வி.தர்மர், சமூக ஆர்வலர், ஆர்.கோம்பை: காவிரி குடிநீர் குழாய் பாதையில் புளியம்பட்டி சந்தை, புளியம்பட்டி மண்டபம் வடக்கு பகுதி, பாளையம் என அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும், சரி செய்வதுமாக உள்ளனர்.
தற்போது குஜிலியம்பாறை சிலும்பா கவுண்டனுார் வடக்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கூடுதலான தண்ணீர் வெளியேறி வருகிறது. காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. சரி செய்வதற்கு ஒரு வாரம் ஆகிவிடுகிறது. இதனால் சிறு உடைப்புகளை கண்டும் காணாமல் உள்ளனர். காவிரி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் குழாய் பாதையை தள்ளி அமைக்க வேண்டும்.
மாற்றி அமைக்கலாம்
வி.பெருமாள்சாமி, விவசாயி, வரதராஜபுரம் கோவிலுார்: குடிநீர் குழாய் பாதை கோவிலுார் புளியம்பட்டி போன்ற இடங்களில் ஊரின் மையப்பகுதியில் வருவதால் இட நெருக்கடியாக தான் உள்ளது. உடைப்பு ஏற்படும் பகுதியில் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் திடீரென குழாய் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் பாதிப்பு தான் .இதை கருதி குழாய் பாதையை சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
சீனாவின் பல்கலை சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடியாது; அமெரிக்கா
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்