உடலை சோதிக்க தாமதம் மறியல்

நத்தம்: -நத்தம் - காக்காபட்டியை சேர்ந்தவர் கண்ணன் 54. இவரது மனைவி சின்னப்பொண்ணு 48. நேற்று மதியம் கோவில்பட்டி பகுதி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

உடல் நத்தம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. டாக்டர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்ல கூறினர். ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் நத்தத்தில் பரிசோதனை செய்யப்படும் என கூற கலைந்து சென்றனர்.

Advertisement