கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி வழக்கு தொடர்ந்த கவுன்சிலரும் ஆப்சென்ட்
தேவதானப்பட்டி:கெங்குவார்பட்டி பேரூராட்சி தி.மு.க., தலைவர் தமிழ் செல்விக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்தை கவுன்சிலர் பொன்மணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
பேரூராட்சி கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று கவுன்சிலர்கள் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது.
2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 3, ம.தி.மு.க.,1, சுயே.,1 வெற்றி பெற்றனர். இதில் 6 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழ் செல்வி தலைவராகவும், 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஞானமணி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் ஆரம்பத்தில் சுமூக உறவு இருந்தது. பின் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர்.
இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரக்கோரி ஜனவரியில் முந்தைய கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.
இருதரப்பையும் அழைத்து பேரூராட்சி அலுவலகத்தில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் 7 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பொன்மணி, தலைவர் தமிழ்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
பேரூராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் நேற்று தேர்தல்அதிகாரி (செயல் அலுவலர்) இளங்கோவன், கூட்டத்தில் ஆதரவு, எதிர்ப்புகளை பதிவு செய்ய தயாரானார்.
கூட்டத்திற்கு தலைவர் தமிழ்செல்வி வந்தார். ஆனால் காலை 11:௦௦ மணி முதல் 12:30 வரை கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என இளங்கோவன் அறிவித்தார்.-
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை