வைகை அணையில் பாலிதீன் கழிவுகள் அகற்றி விழிப்புணர்வு
ஆண்டிபட்டி: வனத்துறை சார்பில் வைகை அணையில் பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் ஒழிப்பு குறித்து தமிழக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, பாலித்தீன் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட வனத்துறை மற்றும் பசுமை பங்காளர் அறக்கட்டளை சார்பில் வைகை அணையில் பல்வேறு இடங்களில் பாலிதீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது. தேனி உதவி வனப்பாதுகாவலர் செசில் கில்பர்ட், ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் வனப் பணியாளர்கள், பசுமை பங்காளர் அறக்கட்டளை நிறுவனர் பனைமுருகன், மாவட்ட பசுமை தோழர் அமைப்பு சார்பில் பிரியங்கா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை