த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

சிதம்பரம்: த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
த.மா.கா., கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக இருந்தவர் புரட்சிமணி, 59; கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தை சேர்ந்தவர். மூப்பனார் தலைமையிலான த.மா.கா., சார்பில், மங்களூர் தொகுதியில் 1996 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். அதற்கு முன்பு, 1991ல் அதே தொகுதியில் காங்., கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவால் நேற்று இறந்தார். அவருக்கு மீனா என்ற மனைவியும், டாக்டர் புவனேஷ் என்ற மகன், டாக்டர் இந்திரா என்ற மகள் உள்ளனர்.
அவரது இறப்பிற்கு, த.மா.கா., தலைவர் வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
Advertisement
Advertisement