ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில், விழுப்புரம் - தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 66055) இரவு 9:00 மணி முதல் நிறுத்தி வைப்பது வழக்கம். மறுநாள் காலை 5:30 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் நோக்கி புறப்படும்.
இந்த ரயில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.
அதிகாலை 2:15 மணிக்கு, விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது, பின்பக்க 3வது பெட்டி கழிப்பறை அருகே உள்ள முதல் சீட்டில், அடையாளம் தெரியாத 65 வயதுள்ள முதியவர் ஒருவர், க்ரீப் பேண்டேஜ் துணி மூலம் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இறந்த முதியவர் காவி நிறத்தில் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சடலத்தை மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, தெரியவில்லை.
இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை