இடிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி புதியதாக கட்டுவது எப்போது

நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை பள்ளத்தெருவில் இடிக்கப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி ஒன்றியத்தை சேர்ந்த நடுவீரப்பட்டு அடுத்துள்ள கிராமம் பத்திரக்கோட்டை.இந்த கிராமத்தில் உள்ள பள்ளத்தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.தற்போதுபெபாதுமக்களுக்கு குடிநீர் போர்வெல் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.இதனால் மின்சாரம் தடைப்படும் நேரத்தில் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு வயல்வெளிகளில் உள்ள மோட்டாரை தேடி செல்கின்றனர்.ஆகையால் பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக இடிக்கப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு பதில் புதியதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
-
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்