அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவு வெப்பம் குறைந்ததால் மக்கள் நிம்மதி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அக்கினி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில் அக்னி சட்சத்திரம் நேற்றுடன் முடிந்தது.

கடலுார் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்னரே மார்ச் மாதம் முதல் கடும் வெயிலின் தாக்கம் இருந்தது. கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியது. க மே மாதம் முதல் இரு வார்த்தில் சில நாட்கள் 100 டிகிரி வெயில் பதிவானது.

இதனால் பகல் நேரத்தில் வெயில் தாக்கமும், இரவு நேரத்தில் கடும் புழுக்கம் ஏற்பட்டு பொதுக்கள் அவதியடைந்தனர். கடந்த வாரம் ஐந்து நாட்கள் மாவட்டம் முழுவதும் திடீர் கோடை மழை பெய்தது. இதனால் கோடை வெயில் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் மேகமூட்டம் சூழ்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இருந்தும் புழுக்கம் உணரப்படுகிறது. நேற்றுடன் அக்னிநட்சத்திரம் முடிவடைந்ததாலும், தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement