கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலுார்: கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது
கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (30ம் தேதி) கலெக்டர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8 மணிக்கு கூட்ட அரங்கில் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளை முன்பாக பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பதில் வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
-
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
-
தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை