சாலையின் குறுக்கே ஓடிய பன்றி கன்டெய்னர் கவிழ்ந்து விபத்து

திருப்போரூர்:கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையில், நேற்று அதிகாலை 1:00 மணியளவில், வண்டலுாரிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி, கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது.

அப்போது புதுப்பாக்கம் அருகே, திடீரென சாலையின் குறுக்கே பன்றி வந்துள்ளது. அதன் மீது ஏற்றாமல் இருக்க, ஓட்டுநர் உடனே வாகனத்தை, சாலையின் இடதுபுறம் திருப்பி உள்ளார்.

அப்போது, கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

லாரியின் முன் கண்ணாடிகள் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை 9:30 மணியளவில், சாலையோரம் கவிழ்ந்த லாரியை,'கிரேன்' வாயிலாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement