ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்..

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் பாண்டி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு, மாவட்டத் தலைவர் பாண்டி பேசினர். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டிற்கு உரிய தீர்வு காண கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement