மனைவி, மகள் மாயம் கணவர் தற்கொலை
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் மனைவியும், மகளும் மாயமாகி விட்டதால் மன வேதனையில் இருந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம் அருகே உள்ளது அம்மாபட்டி கிராமம். இங்கு மறவர் சாவடி தெருவில் வசிப்பவர் தில்லை வாசன் 35, இவரது மனைவி கீர்த்தனா தேவி 30, மகள் சிவானி 12, ஆகியோருடன் வசித்து வருகிறார்.
மே 21 ல் கணவரை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி கடைக்கு மனைவி அனுப்பியுள்ளார். கணவர் வெளியே சென்றவுடன் தனது மகளுடன் மாயமானார். பால் பாக்கெட் வாங்கி வந்த கணவர், வீட்டில் மனைவியையும், மகளையும் காணாததை அறிந்து அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அலைபேசி சுவிட் ஆப் ஆகியிருந்தது.
பின் உறவினர் வீடுகளிலும், பல்லடத்தில் வேலை செய்த இடங்களுக்கு சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தனது மனைவி, மகளை காணவில்லை என உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் தில்லைவாசன் விரக்தியில் வீட்டிற்குள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தில்லை வாசனின் தந்தை குமரன் 67, புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வேன் மீது கார் மோதல்: 2 பேர் பலி
-
ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்
-
ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
-
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்