வேன் மீது கார் மோதல்: 2 பேர் பலி

திருநெல்வேலி: கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் சென்று கொண்டு இருந்தது. பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த சரக்கு வேன் மீது சென்டர் மீடியனை தாண்டி வந்து கார் மோதியது.

இதில் இரண்டு டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement