34.8 அடியாக உயர்ந்தது சிறுவாணி

கோவை: கோவை மாவட்டத்தில், நகர பகுதியில் சாரல் மழை பெய்தாலும் கூட, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில், கன மழை காணப்படுகிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணியின் அணை பகுதியில், 63 மி.மீ., அடிவாரத்தில், 59 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 34.8 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 7.85 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''தென்மேற்கு பருவ மழை நாளை (இன்று) உக்கிரமாக இருக்கும். சில இடங்களில் மிக கனமழை இருக்கலாம். பாலக்காடு கணவாய், கோவை நகரம் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆகிய அனைத்து தென்மேற்கு மழை தரும் பகுதிகளுக்கும் நல்ல மழை கிடைக்கும்.
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூனில் 10 நாட்களுக்கு பருவ மழை ஓய்வு எடுக்கும்,'' என்றார்.
மற்ற இடங்களில் மழை அளவு
கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு:
கோவை தெற்கு - 11.80, பீளமேடு விமான நிலையம் - 3.10 மி.மீ., வேளாண் பல்கலை - 2.60, மேட்டுப்பாளையம் - 3, அன்னுார் - 1.60, வாரப்பட்டி - 14, தொண்டாமுத்துார் - 16.20, மதுக்கரை - 16.10, போத்தனுார் - 20.60, பொள்ளாச்சி - 85.30, மாக்கினாம்பட்டி - 113, கிணத்துக்கடவு - 19, ஆனைமலை - 31, ஆழியாறு - 19.60, சின்கோனா - 90, சின்னக்கல்லார் - 119, வால்பாறை - 76, சோலையாறு - 87 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மேலும்
-
நான் உயிரோடு இருக்கக் கூடாது; மனமுடைந்து ராமதாஸிடம் குமுறிய ஜி.கே.மணி
-
நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று சொன்னவர் நடிகர் ராஜேஷ்: ரஜினிகாந்த் புகழாரம்
-
2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடிப்பது இதற்குத்தான்!
-
அதிகாலை வாகன பயணத்தில் சோகம்: கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
-
நெல்லை பல்கலை. வினாத்தாள் கசிய விட்டது யார்; 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகிறது போலீஸ்!