ஆதார் சிறப்பு முகாம்

கூடலுார்: கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் தபால் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி, அலைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறும். கூடலுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisement