தொழில் போட்டி ஒருவருக்கு கத்திக்குத்து
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை சுந்தர்ராஜ் நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 23. பெரியகுளம் திண்டுக்கல் ரோட்டில் பன்றி இறைச்சி கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பா கண்ணன் 42. இவரும் இதே தொழிலை செய்கிறார். இருவருக்கும் இடையே தொழில் போட்டியால் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் டூவீலரில் சென்ற நவநீதகிருஷ்ணனை, டூவீலரில் சென்ற கண்ணன் உதைத்து, கத்தியால் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கண்ணன் புகாரில், 'என் வீட்டு எதிரே நவநீதகிருஷ்ணன் வீடு உள்ளது. என் வீட்டு சுவரில் நவநீதகிருஷ்ணன் பந்து அடித்து விளையாடியதை கேட்டதற்கு கட்டையால் அடித்து காயப்படுத்தினார்', என்ற புகாரில் போலீசார் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement