போடி அருகே ரோடு மறியல் போக்குவரத்து பாதிப்பு
போடி: போடி தேனி செல்லும் மெயின் ரோட்டில் துரைராஜபுரம் காலனி உள்ளது. இங்கு உள்ள பஸ் ஸ்டாப்பில் அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்வது வழக்கம்.
நேற்று துரைராஜபுரம் காலனியில் பஸ்கள் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., போடி டி.எஸ்.பி., சுனில், தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன், தாசில்தார் சந்திரசேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
துரைராஜபுரம் காலனியில் பஸ்கள் நிறுத்துவது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்: ஊழல் வழக்கில் நடவடிக்கை!
-
தமிழகத்தில் அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு கூடுது மவுசு!
-
ஹமாஸ் கூறுவதை ஏற்க முடியாது என்கிறது அமெரிக்கா; போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல்
-
போதைப்பொருள் பயன்படுத்துகிறேனா? எலான் மஸ்க் சொல்வது இதுதான்!
-
உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
ராமதாஸ் -அன்புமணி மோதல்: பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்?
Advertisement
Advertisement