நிழற்குடை ஒரு புறம் பஸ்கள் நிற்பதோ ஒரு புறம்

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன்பாக இருக்கும் பஸ் ஸ்டாப் நிழற்குடை முன்பு பஸ்கள் நிறுத்தப்படாததால் டூவீலர் நிறுத்துமிடமாகி மாறி உள்ளது. பஸ்களோ அதற்கு முன்பாக ரோட்டோரம் நின்று செல்வதால் பயணிகள் ரோட்டில் மழை,வெயிலில் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நிழற்குடை முன்பு பஸ்கள் நின்று செல்ல வசதியாக பேரிகார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து துறை,போலீசார் துாக்கத்தில் உள்ளனர். முக்கிய ரோடாக உள்ள இதன் வழியே துறை முக்கிய அதிகாரிகள் சென்றும் எதையும் கண்டுக்காமல் உள்ளனர். ரூ. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிழற்குடையும் வீணாகிறது. இது எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் கண்களுக்கு தென்படவில்லையோ..

ஆய்வு செய்து நடவடிக்கையாம்

நாளை (இன்று) ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

--கார்த்திக், டி.எஸ்.பி., திண்டுக்கல்.

Advertisement