நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

திருத்தணி,:திருத்தணி நகராட்சியில், புதிய சென்னை சாலை அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆறு, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உருவாகி வெங்குப்பட்டு, ஜனகாபுரம் வழியாக திருவள்ளூர் மாவட்டம் செருக்கனுார், திருத்தணி வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து, பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்நிலையில், திருத்தணி நகராட்சி, முருகப்ப நகர், குமரன் நகர் மற்றும் காந்திரோடு, பழைய, புதிய சென்னை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நந்தியாற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால், ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நந்தியாற்றில் விடப்படும் கழிவுநீரை நேரிடையாக விடாமல், தண்ணீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமுக்கூடல் சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
-
அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் துணை சுகாதார நிலைய சுவரில் விரிசல்
-
வேகமெடுக்கும் கொரோனா: 3,758 பேருக்கு பாதிப்பு
-
உடைந்த கம்பத்தால் விபத்து அபாயம்
-
மஹாராஷ்டிராவுக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்? மத்திய அரசுக்கு கேரளா கேள்வி
-
வாலாஜாபாத் ரயில்வே சாலையில் எச்சரிக்கை பலகை அமைப்பு
Advertisement
Advertisement