ரேஷன் ஊழியர் ஆர்ப்பாட்டம்

அனுப்பர்பாளையம்; தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், அங்கேரிபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ராமு, தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, வரவேற்றார். மாநில தலைவர் ராஜேந்திரன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ரேஷன் கடை விற்ப னையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement