மதிப்பு கூட்டு மையம் மீண்டும் துவங்க கோரிக்கை 

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தில் துவக்கப்பட்ட பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணியை மீண்டும் துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நடுவீரப்பட்டில் 'உழவரைத் தேடி வேளாண்மை' திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, சி.என்.பாளையம் விவசாயிகள் 'தங்கள் பகுதியில் 16 கோடி ரூபாய் மதிப்பில் பலா மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது.


இடத்தை சுற்றி பல நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பலா மரங்கள் வைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணியை மீண்டும் துவக்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்' என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் விவசாயிகளிடம் கூறினார்.

Advertisement