மதிப்பு கூட்டு மையம் மீண்டும் துவங்க கோரிக்கை

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தில் துவக்கப்பட்ட பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணியை மீண்டும் துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டில் 'உழவரைத் தேடி வேளாண்மை' திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, சி.என்.பாளையம் விவசாயிகள் 'தங்கள் பகுதியில் 16 கோடி ரூபாய் மதிப்பில் பலா மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது.
இடத்தை சுற்றி பல நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பலா மரங்கள் வைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணியை மீண்டும் துவக்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்' என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் விவசாயிகளிடம் கூறினார்.
மேலும்
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா