பிராமணர் சங்க கிளை கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்க கிளைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கஸ்துாரி ரங்கன் பட்டா்ச்சாரியார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க கிளை தலைவராக சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில், சிவசுப்ரமணியன், மோகன், நவீன்ராஜன், சண்முகராஜன், மூர்த்தி, ரமாமோகன், சிவக்குமார், சேகர், பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement