துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் நந்தா கல்லுாரிகளில் வளாக தேர்வு

ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளை சேர்ந்த, இயந்திரவியல் மற்றும் ரசாயன பொறியியல் மாணவர்களுக்கென, துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில், வளாகத்தேர்வு நடந்தது. ஸ்பிக் நிறுவன மனிதவள மூத்த மேலாளர் இசக்கியப்பன், துணை மேலாளர் ஜெயக்குமார், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில் நுட்பக் கல்லுாரி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். இதில், 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலில் எழுத்து தேர்வு, அதை தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை செய்த, கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை, ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன், செயலர் நந்தாகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், தொழில்நுட்ப வளாகன் நிர்வாக அலுவலர் வேலுசாமி பாராட்டினர்.

Advertisement