புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில், புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக, 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


கரூர் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்கப்படுகிறதா என, டீ கடை மற்றும் பீடா கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.அதில், புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக காமிது அயிஷா, 55; சபரிநாதன், 35; கிருஷ்ணமூர்த்தி, 20; மருதாயி, 45; மாதர், 61; கலைமணி, 72; அப்ராஜ், 75; கருப்பையா, 70; செல்வம், 57; சவுக்கத் அலி, 53; மாதார் ஷா, 52; ஆகிய, 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement