டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

கரூர்: கரூர் அருகே, டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தியதாக வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.


கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், எஸ்.ஐ., கார்த்திகேயன், போலீசார் இளம்பரிதி, செந்தில் குமார், அனுராதா, சுந்தரி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு, பசுபதிபாளையம் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில், 21 பாலீத்தின் மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த, கரூர் மாவட்டம் சணப்பிரட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், 40, என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டூவீலர் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement