முத்தனுார் வருண கணபதி கோவிலில் சதுர்த்தி பூஜை
கரூர்: நொய்யல் அருகே முத்தனுார் வருண கணபதி கோவிலில், வைகாசி மாத சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
அதில், மூலவர் விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம், புன்னம், உப்புபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய்புகழூர், திருகாடுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள, விநாயகர் கோவில்களிலும், வைகாசி மாத சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement