கோவிலில் தாலி செயின் பறித்த வட மாநில பெண் கைது
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, பெண்ணிடம் தங்க தாலி செயினை பறித்து சென்ற, வட மாநிலத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி, 45; இவர் கடந்த, 28ல் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தார். அப்போது, கூட்டத்தில் ராஜேஸ்வரி அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து, ராஜேஸ்வரி போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, தங்க தாலி செயினை திருடியதாக, மேற்கு வங்க மாநிலம், கிடலா மந்திர் பகுதியை சேர்ந்த அருண் என்பவரது மனைவி குஷி, 23, என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க செயின் பறிப்பு தொடர்பாக, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆர்யா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
Advertisement
Advertisement