குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

நாமக்கல்: ராசிபுரத்தில் இருந்து பழைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், 21, என்பவரை, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இளவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்த வந்தனர். அவருக்கு, கஞ்சா சப்ளை செய்வதாக நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இளவர் நீதிமன்றத்தில், எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காத்திருந்தனர்.

நேற்று மதியம், 1:30 மணிக்கு, குற்றவாளி விக்னேஷிற்கு, கஞ்சா பொட்டலம் கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 25, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement