குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது
நாமக்கல்: ராசிபுரத்தில் இருந்து பழைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், 21, என்பவரை, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இளவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்த வந்தனர். அவருக்கு, கஞ்சா சப்ளை செய்வதாக நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இளவர் நீதிமன்றத்தில், எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காத்திருந்தனர்.
நேற்று மதியம், 1:30 மணிக்கு, குற்றவாளி விக்னேஷிற்கு, கஞ்சா பொட்டலம் கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 25, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement