பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

பகோட்டா: பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா அரசு. இந்தியா எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
காங்கிரஸ் எம். பி., சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கி வருகிறது.
அந்த வகையில், கொலம்பியாவில் பார்லிமென்ட் உறுப்பினர்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர். அப்போது,"இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானைத் தாக்கிய பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்த கொலம்பிய அரசாங்கத்தின் எதிர்வினையில் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம்.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இது மோசமான செயல்" என சசிதரூர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது, பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.
இந்திய எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசின் அறிக்கை திரும்பப் பெறப்பட்டதை அறிந்து இந்தியா மகிழ்ச்சியடைகிறது என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (10)
spr - chennai,இந்தியா
31 மே,2025 - 19:19 Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
31 மே,2025 - 16:26 Report Abuse

0
0
Reply
Ramakrishnan Sathyanarayanan - ,இந்தியா
31 மே,2025 - 14:12 Report Abuse

0
0
Reply
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
31 மே,2025 - 13:26 Report Abuse

0
0
Reply
S.jayaram - Sellur,Madurai,இந்தியா
31 மே,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
Loganathan Palani - ,இந்தியா
31 மே,2025 - 12:22 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
31 மே,2025 - 11:40 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
31 மே,2025 - 11:37 Report Abuse

0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
31 மே,2025 - 11:55Report Abuse

0
0
Ganesh - Chennai,இந்தியா
31 மே,2025 - 12:45Report Abuse

0
0
Reply
மேலும்
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி
-
மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!
-
பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டி: மும்பை அணி பேட்டிங்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
Advertisement
Advertisement