புகை பிடிக்கும் வயதை அதிகரிக்க அன்புமணி வலியுறுத்தல்

2

சென்னை : 'கர்நாடகாவை போல் தமிழகத்திலும், புகை பிடிப்பதற்கான வயதை, 21 ஆக அதிகரிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:



கர்நாடகாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களை பயன்படுத்துவதற்கான, குறைந்தபட்ச வயது 21ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், கர்நாடக அரசு இயற்றியுள்ள, இந்த சட்டம் வரவேற்கத்தக்கது. இந்த குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதம், 200 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.



இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, கர்நாடகாவில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்தியாவில் 18 வயதை கடந்த ஆண்களில் 25 சதவீதம் பேர், பெண்களில் 15 சதவீதம் பேர் புகை பிடிப்பது, உலக சுகாதார நிறுவனம், அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


எனவே, இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம். ஆனால், அதை செய்ய, மத்திய, மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.


பொது இடங்களில் புகை பிடிப்பதை, தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு மறுக்கிறது.


இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புகை பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை, 21 ஆக
உயர்த்தும் சட்டத்தை, மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement