பேக், எழுதுபொருள் வாங்க கடைகளில் அலைமோதல்

இன்று பள்ளிகள் திறப்பு என்பதால், திருப்பூரில் நேற்று காலை முதலே ஸ்டேஷனரி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் கடைகளுக்குள் நிற்க முடியாத அளவு வாடிக்கையாளர்களை காண முடிந்தது. அரிசிக்கடை வீதி, பெரியகடை வீதி, கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி, மத்திய பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய கடைகள், காமாட்சியம்மன் கோவில் வீதி ஆகியவற்றில் கூட்டத்தை காண முடிந்தது. மாலை, இரவில் மேலும் கூட்டம் அதிகரித்தது.
மகன், மகள் பள்ளிக்கு கொண்டு செல்ல தேவையான பென்சில், ரப்பர், பேனா துவங்கி, நோட்டு, புத்தகம், நோட்ஸ் வரை அனைத்து பொருட்களையும் வாங்க பெற்றோர் அலைமோதினர்.
ஸ்கூல் பேக் விலை எப்படி?
பிற ஸ்டேஷனரி பொருட்களை விட பேக் வாங்கும் கடைகளில் தான் நேற்று கூட்டம் அலைமோதியது. சிறிய ஸ்கூல் பேக், 150 - 300, பெரியது, 400 - 550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 'லஞ்ச் பேக்', 100 - 250, ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று பள்ளிகள் திறப்பு; கட்டாயம் நேற்றே பொருட்களை வாங்கிவிட வேண்டும் என்பதால், கடை வீதியெங்கும் பேக்குகளை தேடி பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் அலைந்தனர். நேற்றிரவு வரை கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது.
மேலும்
-
தி.மு.க., பிரமுகர் படுகொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்
-
துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
-
பிரீமியர் கிரிக்கெட் பைனல்: பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கு
-
அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...
-
இந்தியா-தாய்லாந்து மோதல் * நட்பு கால்பந்தில்...
-
இரண்டாவது சுற்றில் சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்...